Tuesday 2 January 2018

தாது மணல் தொழிலுக்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்பே இல்லை...!

இயற்கையாகவும், செயற்கையாகவும், மனிதன் கதிர்வீச்சை எதிர்கொள்கிறான். இதில் செயற்கையாக எற்படும் கதிர்வீச்சுகள் மிகவும் குறைவு. இயற்கையாக ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம். உதாரணமாக சூரியனில் இருந்து ஏற்படும் புறஊதா கதிர்வீச்சு இதர செயற்கையான கதிர்வீச்சுகளை விட கூடுதலாக பாதிப்பு கொடுக்கப் கூடியது. இந்த புறஊதா கதிர்வீச்சு சூரியனில் இருந்து வருவதை தடுப்பது மேலே உள்ள ஓசோன் படலம். புவி வெப்பமயமாதலாலும், காடுகள் அழிக்கப் படுவதாலும், போதிய அளவு மரங்கள் வளர்க்கப் படாததாலும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து புறஊதா கதிர்கள் பூமியை நேரடியாக தாக்குகின்றன. எனவே இயற்கையாகவே மனிதன் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கீழ்கண்ட படம் செயற்கையாகவும், இயற்கையாகவும் உருவாகும் கதிர்வீச்சு மற்றும் அவற்றின் அளவு பற்றி விவரிக்கிறது. பொது மக்களிடம் கதிர்வீச்சு பற்றிய ஒரு புரிதல் இல்லாமையை கருத்தில் கொண்டு தாது மணல் சுரங்கத்திற்கும் கதிர்வீச்சுக்கும் கற்பனையான ஒரு கட்டுக் கதையை உருவாக்கி பொய் பிரச்சாரம் சில ஊடகங்களிலும் சில நபர்களாலும் செய்யப்படுகிறது. கீழ்கண்ட படம் இயற்கையாகவோ, செயற்கையாகவோ தாது மணல் சுரங்க பணியால் எந்த கதிர்வீச்சும் ஏற்படுவதில்லை. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்கும்.


No comments:

Post a Comment