Monday 9 April 2018

கட்டிடங்களின் தாழ்வான பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு அதிகம்

கல், மண், கட்டிடம் என அனைத்திலும் கதிர்வீச்சு. குறிப்பாக கட்டிடங்களில் தாழ்வான பகுதிகளில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். இதனை குறைப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தந்த நாட்டில் உள்ள அணுசக்தி துறை அதிகாரிகளும் பொது மக்களுக்கு உதவுவார்கள். அறையை மூடி வைக்காமல் காற்றோட்டமாக திறந்து வைப்பது கதிர்வீச்சை குறைக்க உதவும். இதனால் தான் மூடிய கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள் ஆகியவற்றில் திடீரென இறங்கும் தொழிலாளர்கள் மரணம் அடைவதோ..!!! ஒரு பேராசியர் கூறினார். வெகுநாட்களாக பூட்டி கிடக்கும் கட்டிடத்தை முதன் முதலில் குடியேறுவதற்கு முன்பு பூஜை, புனஸ்காரம் என செய்வது அதனை திறந்து காற்றோட்ட வசதி செய்து உள்ளே உள்ள கதிர்வீச்சின் அளவை குறைப்பதற்கு தான் என்று.. விஞ்ஞான பூர்வமாக அது உண்மை தான் போலும்.. எல்லோரும் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து கொண்டு எந்த கதிர்வீச்சும் இல்லாத தாது மணல் தொழிலை அபாண்டமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.







No comments:

Post a Comment